×

ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்

ஒட்டன்சத்திரம், மே 5: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2002ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் சார்பில் பள்ளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டு, இதன் திறப்பு விழா நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜான் வில்பர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார்.

விழாவில் முன்னாள் மாணவ- மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். இதில் பெற்றோர் கழக சங்க தலைவர் இஸ்மாயில், பள்ளி ஆசிரியர் இளங்கோவன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் மாணவ- மாணவிகள் குரூப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : School ,Ottanchatram Udayakottai ,Ottenshatram ,Nehruji Government Higher Secondary School ,Udayakottai ,Panchayat ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி